
சமூக சேவை என்பது வருவாய்க்கான மேலாண்மை என்று அர்த்தமாகி விட்டது. நிதி உதவிகள் நிரந்தர வருவாயாக மாறிவிட்டன. இதற்கு எச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலவும் உதாரணங்களாக இருக்கின்றன.
எச்ஐவி கிருமி அனைவரின் உடலிலும் இருக்கிறது. அதன் தன்மை எதிர்மறையா(நெகட்டிவ்), நேர்மறையா(பாசிட்டிவ்) என்பதுதான் கேள்வி. இங்கு நேர்மறையாக இருந்தால் பிரச்னை. அதாவது எச்ஐவி பாசிட்டிவ். இந்த கிருமி தொற்று ஏற்பட்டவர்களை எச்ஐவி உள்ளவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களால் மற்றவர்களை போன்று இயல்பான வாழ்க்கை வாழ முடியும். இவர்களிடம் எந்த வித்தியாசத்தையும் காண முடியாது. எனவே தங்களை நோயாளிகள் என்று அழைக்க கூடாது என்று இவர்கள் வலியுறுத்துகின்றனர். இவர்களுடன் பழகுவது, சாப்பிடுவது, ஒன்றாக இருப்பது போன்றவற்றால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இவர்களுடன் உடலுறவு கொள்வது, அவர்களின் ரத்தத்தை பயன்படுத்துவது, அவர்களுக்கு போட்ட ஊசியை மற்றவர்களுக்கு போடுவது தான் தீங்கு. எச்ஐவி கிருமி அதிகரிப்பால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. நோய் உடனடியாக தாக்கும். உடல் பலவீனமாகும். எச்ஐவி பாதிப்பு அதிகமான நிலையில், அதாவது முற்றிய நிலையைதான் எய்ட்ஸ் என்கிறார்கள். இது நோயின் கடைசிக் கட்டம்.









No comments:
Post a Comment