ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Saturday, July 10, 2010

வகுப்பறையில் மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியரை பள்ளியில் இருந்து சஸ்பெண்டு : தவ்ஹீத் ஜமாத் அதிரடியாக கலத்தில் ...

பரங்கிப்பேட்டை : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வகுப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஹபீப் ரஹ்மான்; வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மகன் உபைது ரஹ்மான் (15). இவர், பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி, கணித பாட ஆசிரியர் சுந்தர்ராஜன், பாடம் நடத்தும் போது, "ஒன்றில் அரை போனால் எவ்வளவு?' என கேட்டார். மாணவர் உபைது ரஹ்மான் சிரித்துக் கொண்டே, "அரை' என கூறியுள்ளார். வகுப்பில் இருந்த சக மாணவர்கள் சிரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சுந்தர்ராஜன், உபைது ரஹ்மானின் பேன்ட், சட்டையை சக மாணவர்கள் மூலம் கழற்றினார். ஜட்டியை பாதி அவிழ்த்தபோது, மாணவர் கதறி அழுததால் விட்டுள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவர் உபைது ரஹ்மான், நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறினார். அவரது தாய், இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். இதனால் மனம் வெறுத்த மாணவர் உபைது ரஹ்மான், இரண்டு நாட்களாக பள்ளிக்குச் செல்லவில்லை.

நேற்று முன்தினம் (8ம் தேதி) பள்ளிக்குச் சென்ற சக மாணவர்கள், ஆசிரியரை கண்டித்து வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்தனர். அவர்களை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து வகுப்பறைக்குள் அனுப்பி வைத்தனர். மாணவரை நிர்வாணப்படுத்திய சம்பவம், பிற மாணவர்கள் மூலம் நேற்று வெளியே தெரியத் துவங்கியது. இதைத் தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முகமது யூனுஸ், ஜெகநாதன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். தகவலறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலர் முத்துராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. டி.எஸ்.பி., மூவேந்தன், தாசில்தார் காமராஜ் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலசுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தினர். இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சுந்தர்ராஜன் நேற்று பள்ளிக்கு வரவில்லை. கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில், ஆசிரியர் சுந்தர்ராஜன் நேற்றிரவு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP