இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்.) ”உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன். அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீங்குவேன். இறங்தோரை உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்கு கூறுவோன். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குக் சான்று உள்ளது” (என்றார்). (அல்குர்ஆன் 3-49)
முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் அளிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர்
இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள்.
முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்ததில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது.இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும்.அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது.
வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.
எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று அடித்துக்கூறுகின்றனர் அந்த விஞ்ஞானிகள்!
பறவைகளை வடிவமைத்து அதற்கு உயிர் கொடுத்தாக இறைவன் தம் திருமறையில் கூறுவதில் இருந்து இஸ்லாம் தான் உன்மையான மார்க்கம் என்று அறிய வேண்டாமா?
Saturday, July 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)









No comments:
Post a Comment