ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Monday, September 6, 2010

சவுதியில் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் ரூபா 75000ம் நிதியுதவி

கடந்த 10 நாட்களாக பத்தரி்கைகளில் பேசப்பட்டு வரும் மிக பரபரப்பான செய்தி ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சவூதியில் வைத்து பாதிக்கப் பட்டுள்ளார் என்பதாகும்.

குறிப்பிட்ட பெண் சவூதிக்கு வீட்டு வேலைக்காக சென்றவர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இலங்கை திரும்பினார்.இலங்கை திரும்பி அடுத்த நாள் ஆரியவதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.

அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவ குழு ஆரியவதியின் உடலில் கிட்டத்தட்ட 23 ஆணிகள் ஏற்றப் பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
23 ஆணிகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறப்பட்ட சவுதியைச் சேர்ந்த தம்பதியினரை சவுதி அரசு கைது செய்துள்ளது.

இந்தச் செய்தி கடந்த சில தினங்களாக இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சிங்கள மக்களிடத்தில் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணத்தையும் ஏற்படத் துவங்கியது.


சம்பவத்தை அறிந்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் நிருவாகிகள் கடந்த 01.02.2010 செவ்வாய் கிழமையன்று ஆரியவதியை நேரடியாக சந்திப்பதற்காக அவருடைய சொந்த ஊருக்கே சென்றனர்.

அங்கு ஆரியவதியைச் சந்தித்த ஜமாத்தின் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஆரியவதியின் மருத்துவ செலவுக்காக 75000 (எழுபத்தி ஐயாயிரம்) ரூபாவை அவரிடத்தில் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள்களுக்கு பேட்டியளித்த ஜமாத்தின் தலைவர் ரியால் அவர்கள், சகோதரி ஆரியவதிக்கு ஏற்பட்ட இந்த கொடுமையை கடுமையாக கண்டிப்பதுடன் இஸ்லாத்திற்கும் குறிப்பிட்ட சவுதிய தம்பதின் செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து சிங்கள மொழியில் பேட்டியளித்த ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் இஸ்லாம் மனித நேயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தெளிவாக விளக்கினார்.

பூனைக்கு தண்ணீர் கொடுத்ததின் மூலம் ஒரு பெண் சுவர்கம் சென்றதையும் உணவு கொடுக்காமல் சாகடித்ததின் மூலம் ஒரு பெண் நரகம் சென்றதையும் எடுத்துக் காட்டி நபியவர்கள் இப்படி கூறியிருக்கிறார்கள் இஸ்லாம் மனித நேயத்தினை வலியுருத்தும் மார்க்கம் அதனால் இந்த செயலை நாம் நமது ஜமாத் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என்பதை தெளிவுபடுத்தினார்.

இந்தச் செய்தியைக் கேட்ட சிரச நியுஸ் பெஸ்டின் செய்தியாளர் இஸ்லாத்தின் இந்தக் கொள்கை தாம் அதிகம் நேசிப்பதாகவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மிக முக்கியமான பணியைத்தான் செய்திருப்பதாகவும் கூறி பாராட்டுத் தெரிவித்தார். அல்ஹம்துலில்லாஹ்!

அது போல் முஸ்லீம்கள் சார்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் ஆரியவதியை சந்திக்க வந்தது தனக்கு மிக சந்தோஷமாக இருப்பதாக லங்காதீப என்ற சிங்கள பத்திரிக்கையின் செய்தியாளர் குறிப்பிட்டார்.

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP