ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Sunday, September 19, 2010

பாபர் மசூதி இடிப்பு காட்சிகளை டி.வி.யில் ஒளிபரப்ப கூடாது; 24ம் தேதி தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு (என்.பி.ஏ.) சில விதிமுறை களை அறிவித்துள்ளது.

புதுடெல்லி: ‘‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன், யூகத்தின் அடிப்படையில் செய்தி கள் வெளியிட வேண்டாம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட காட்சிகளையும் ஒளிபரப்ப வேண்டாம்’’ என்று டி.வி. சேனல்களுக்கு ‘நியூஸ் பிராட்காஸ் டர்ஸ் அசோசியேஷன்’ விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.



உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம்ஜென்ம பூமி & பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கில், 24ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பு எப்படி இருந்தாலும், ஒரு தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், உ.பி. முழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள் ளது.

இந்நிலையில், அயோத்தி தீர்ப்பு தொடர்பான செய்திகளை வெளியிட நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் (என்.பி.ஏ.) சில விதிமுறை களை அறிவித்துள்ளது.

இதுகுறித்து என்.பி.ஏ. நேற்று வெளியிட்ட விதிமுறைகள் வருமாறு:


* நாட்டின் மதச்சார்பின்மை பாதிக்காத வகையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு செய்தியை வெளியிட வேண்டும். பல்வேறு மதம், மொழி, இனம் நிறைந்த நமது நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செய்திகளோ, காட்சிகளோ வெளியிட வேண்டாம்.

* அயோத்தி இடம் தொடர்பான வழக்கில், தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே யூகச் செய்திகளை வெளியிட வேண்டாம்.

* கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்ப கூடாது.

* தீர்ப்புக்கு பின்னர் எதிர்ப்பு போராட்டங்கள் அல்லது மகிழ்ச்சியில் கொண்டாட்டங்கள் நடந்தால் அவற்றையும் ஒளிபரப்பக் கூடாது.

* சரியான தகவல்களை மட்டும் நன்கு உறுதி செய்து வெளியிட வேண்டும்.

* எந்த ஒரு பிரிவினரையும் தூண்டும் வகையில் செய்திகள், காட்சிகளை வெளியிட வேண்டாம்.
இந்த விதிமுறைகளை உறுதியாக கடைப்பிடித்து நாட்டின் மத நல்லிணக்கத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு என்.பி.ஏ. கூறியுள்ளது.

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP