ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Thursday, September 30, 2010

பாபர் மஸ்ஜித் தீர்பு : நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரம்


பாபர் மஸ்ஜித் வழக்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பை அறிவிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளையின் 3 நீதிபதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீதிபதிகள் டி.வி.சர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யு.கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தான் இன்று இந்தத் தீர்ப்பை அளிக்கவுள்ளது.

இந்த தீர்ப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளையின் உள் பகுதியிலும், வெளிப் பகுதியிலும் கூடுதலாக மத்தியப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பணியில், ஒரு எஸ்பி, 6 கூடுதல் எஸ்பிக்கள், 22 துணை எஸ்பிக்கள், 144 சப்-இன்ஸ்பெக்டர்கள், 104 ஏட்டுகள், 807 போலீஸார் மற்றும் 200 மத்திய கமாண்டோ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதே போல அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தீர்ப்பை வெளியிடவுள்ள நீதிபதிகள் டி.வி.சர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யு.கான் ஆகியோருக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிபதிகளின் வீடுகளுக்கு தலா 20 கமாண்டோ படையினர், 5 மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

மேலும் 3 நீதிபதிகளுக்கும் தனித்தனி பாதுகாப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகளின் கார்களுக்கு முன்பாக `பைலட்' கார்களும், பின்னால் `எஸ்கார்ட்' கார்களும் பாதுகாப்புக்காக செல்கின்றன.

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP