ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Monday, September 27, 2010

அயோத்திப் பிரச்சினையை பேச்சுவார்த்தையால் தீர்க்க முடியாது- இந்திய வக்பு வாரியம்

லக்னோ: அயோத்திப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது இயலாத காரியம் என்று முஸ்லீம் வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அது ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், பேச்சுவார்த்தை, சமரசம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை என்று கூறியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றம் அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக சன்னி வக்பு வாரியம் ஒரு அபிடவிட்டை தாக்கல் செய்துள்ளது. அதில்தான் இத்தனை காலமாக நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. எனவே இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை சரிப்பட்டு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனுவை நாளை தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுக்கவுள்ளது நினைவிருக்கலாம்.

பேச்சுவார்த்தை பலனைத் தராது என்று ஏற்கனவே ராம்ஜென்மபூமி அமைப்பும், இந்து அமைப்புகளும் கூறி விட்டன. இந்த நிலையில் தற்போது வக்பு வாரியமும் அதே பதிலைத் தந்துள்ளதால், நாளைய தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP